அக்ஷய் குமார் வாழ்கை பயணம்

        அக்ஷய்  குமார்   வாழ்கை  பயணம் 




அக்ஷய்  குமார் ,   இந்தி :    என்ற    
ராஜிவ்   ஹரி   ஓம்   பாட்டியா     
1967ல்   செப்டம்பர் 9  ஆம்   நாள்   பிறந்தார்.    
அவர்   ஒரு    இந்தியத்    திரைப்பட     
நடிகர்    ஆவார்.     
அவர்   90க்கும்   மேற்பட்ட     
இந்தித்    திரைப்படங்களில்     
தோன்றியுள்ளார்.






1990களில்   குமார் ,    பாலிவுட்டின்     
அதிரடி    படங்களான    கிலாடி   (1992),     
மோஹ்ரா   (1994)   மற்றும்   சப்ஸே  படா    
கிலாடி   (1995)   ஆகிய    படங்களிலும்     
மற்றும்   'கிலாடி     
தொடர்வரிசைகளிலும்    நடித்தார்,    
இவர்  யே  தில்லாகி  (1994)    
மற்றும்  டாட்கன்  (2000)    
போன்ற   காதல்   படங்களிலும்,     
அதேபோல   ஏக்  ரஸ்தா  (2001)    
போன்ற   நாடக   படத்திலும்   நடித்து    
தன்    திறமையை    நிரூபித்துக்    
காட்டினார்.    
குமார்   பிறகு    நகைச்சுவைப்    
படங்களிலும்    நடித்தார்.





அவரது    நகைச்சுவை    நடிப்புத்திறனை    
ஹேரே   பேரி  (2000),     
முஜ்ஜேஸே  ஷாதி  கரோகி  ( 2004),    
கரம்  மசாலா  (2005)   மற்றும்    
ஜான்-இ-மான் (2006)    
படங்களில்    தொடர்ச்சியாக     
வெளிப்படுத்தினார்.    
2008ல்,    கனடா,    ஆண்டாரியோவில்     
அமைந்து    உள்ள    விண்ட்சர்    
பல்கலைக்   கழகம்,     
அவருக்கு   சட்டத்    துறையில்    
கௌரவ    டாக்டர்   பட்டம்    வழங்கியது.    
அது    அவரின்    இந்தியத்     
திரைத்துறைக்கு    அளித்த     
மகத்தான     பங்களிப்புக்குரிய     
அங்கீகாரமாகும்.    
2009ல்,    அவர்    இந்திய     
அரசாங்கத்தாரால்    பத்மஸ்ரீ     
விருது    பெற்றார்.




ஆரம்பகால    வாழ்க்கை




அக்க்ஷய் பஞ்சாபில் அமிர்தசரசில் ஒரு
பஞ்சாபிய  குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை ஒரு அரசாங்கப் பணியாளர் ஆவார். இளம்வயது முதற்கொண்டே,  அவர் ஒரு கலைஞராக அதிலும் குறிப்பாக நடனமாடுபவராக அடையாளம் கண்டறியப்பட்டார்.  குமார் டெல்லி
சாந்தினி சௌக் சுற்றுப் புறத்தில் வளர்ந்தார் அதன்பின்னரே அவர்
மும்பைக்கு இடம்பெயர்ந்தார்.  அங்கே, அவர்
கோலிவாடா அதாவது பஞ்சாபியர்கள் நிறைந்த பகுதியில் குடிபுகுந்தார்.
அவர் டான்பாஸ்கோ பள்ளியில் கல்வி பயின்றார். பிறகு கல்சா கல்லூரியில் பயின்றார், அங்குதான் அவர் ஜான்பால் சிங்க் உடன் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டார்.







இவர் பாங்காக்கில் தற்காப்புக் கலைகள் பயின்றார். அங்கு ஒரு தலைமைச் சமையல்காரர் ஆகவும் பணிபுரிந்தார். பிறகு மும்பை திரும்பி, தற்காப்பு கலைகள் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார்,  பின்னர் விளம்பரத் தோற்றம் காட்டலிலும் ஈடுபட்டார். இரண்டு மாத விளம்பரத் தோற்றம் காட்டுதலில் ஈடுபட்ட பிறகு,   அவருக்கு தயாரிப்பாளர் பிரமோத் சக்ரவர்த்தியின் டீதார் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரம் வழங்கப் பெற்றார்.



தொழில் வாழ்க்கை

1990

குமார் பாலிவுட்டில் 1991ல் சௌகான்ந் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், அதைத்தொடர்ந்து, 1992ல் சிலிர்ப்பூட்டும் திரைப்படமான கிலாடி யில் நடித்தார். 1994ல் அதிரடி திரைப்படங்களான மெயின் கிலாடி து அனாரி மற்றும் மோஹ்ரா போன்ற திரைப்படங்களில் நடித்தார்.



அத்திரைப்படங்கள் அவ்  ஆண்டிலேயே அதிக மொத்த பணம் வசூல் ஈட்டிய படங்களாக அமைந்தது..  அதேவருடம் பிற்பாதியில்,
யாஷ் சோப்ரா அவருடைய காதற்காவியப் படமான யேஹ் தில்லகி யில் அவரை நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்தார், அதுவும் ஒரு வெற்றி படமாக அமைந்தது. இப்படத்தில் அவரது நடிப்பு திறமைக்க பாராட்டுதலைப் பெற்றார்.





இப்படத்தில் அவர் ஒரு காதல் நாயகனாக நடித்திருந்தார்,  இது அவர் முன்பு நடித்திருந்த அதிரடி பாணியை ஒப்பிட்டுப் பார்க்கும் போது,   இது வேறுபட்டிருந்தது. அதன்  விளைவாக அவர் மிகச்சிறந்த நடிகர் என்ற பிலிம்ஃபேர் விருதிற்காகவும், ஸ்டார் ஸ்கிரின் விழாவுக்காகவும் முன்மொழியப்பட்டார். அதே ஆண்டு மேலும் குமாருக்கு , சுஹாக் மற்றும் குறைந்த செலவு படமான ஏலன்   ஆகியவை வெற்றிப்படங்களாக அமைந்தன.
இந்த எல்லா வெற்றிகளும், குமாரை அந்த வருடத்தின் ஒரு வெற்றிகரமான நடிகராக்கியது.





1995ல், அவருடைய வெற்றிபெறாத திரைப்படங்களுக்கிடையில், கிலாடி திரைப்பட வரிசையில் இவர் நடித்த மூன்றாவது படமான சப்ஸே படா கிலாடி வெற்றி பெற்றது.  கிலாடி வரிசையில் நான்காவது வெற்றிப்படமாக அமைந்த கிலாடியோன் கா கிலாடி திரைப்படத்தில் ரேகா மற்றும் ரவீணா தாண்டன் இவருக்கு ஜோடியாக நடித்தனர். அது அவ்வருட திரைப்படங்களுள் அதிக மொத்தவசூல் பெற்றுத் தந்த திரைப்படமாகவும் அமைந்தது .





1997ல், யாஷ் சோப்ராவின் வெற்றிப் படமான தில் டு பாகல் ஹை அதில் துணை நடிகராக நடித்தார், அப்படம் அவருக்கு  மிகச்சிறந்த துணை நடிகருக்கான பிலிம்ஃபேர் விருதுக்கு முன்மொழிய வைத்தது. அதே வருடம், கிலாடி வரிசையில் ஐந்தாவது திரைப்படமான, மிஸ்டர் அண்ட் மிஸர்ஸ் கிலாடியில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் மற்ற  கிலாடி படங்கள் போல் அல்லாமல், இது வியாபாரரீதியாக தோல்வியைத் தழுவியது.
அதேபோல் பின்வரும் வருடங்களில் வெளிவந்த, கிலாடி
வரிசை படங்கள் வெற்றி பெறவில்லை.







1999ல், குமார் அவரது படங்களான சாங்கார்ஷ் மற்றும் ஜான்வார் போன்றவற்றில் ஏற்றிருந்த கதாபாத்திரங்களுக்காக விமர்சனப் பாராட்டுதல்கள் பெற்றார். அதில் முதலில் வெளியான சாங்கார்ஷ் வெற்றிபெறவில்லை, பின்னர் வெளியான ஜான்வார் மிகப்பெரும் வெற்றிபெற்றது.




2000



2000ல் நகைச்சுவைத் திரைப்படமான
ஹேரா பேரி யில் (2000) நடித்தார். அது வியாபாரரீதியில் வெற்றி அடைந்தது,  அவர் டாட்கான் என்ற காதற்காவியப் படத்தில் அதேவருடம் நடித்தார், அதுபோதுமான அளவில் பாக்ஸ்ஆபீஸில் வெற்றி பெற்றது.




2001ல், குமார் ஆஜனாபி திரைப்படத்தில் எதிர்மறை பாத்திரம் ஏற்று நடித்தார். அது அவருக்கு மிகுந்த பாராட்டுதலையும் சிறந்த வில்லன் நடிகருக்கான முதல் பிலிம்ஃபேர் விருதையும் பெறவைத்தது. ஆங்கேன் திரைப்படத்தில் குருடர் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.





ஹேரா பேரி திரைப்படத்தைத் தொடர்ந்து, குமார் பல நகைச்சுவைப் படங்களில் நடித்தார் அவ்வரிசையில்
ஆவாரா பாகல் தீவானா(2002), முஜ்ஷஸே ஷாதி கரோகி (2004)மற்றும் கரம் மசாலா (2005) போன்ற படங்களும் உள்ளடங்கும். இப்படங்கள் மிகப்பெரும் பாக்ஸ் ஆபீஸ் வெற்றிபெற்றன. கரம் மசாலா திரைப்படத்திற்காக இவருக்கு சிறந்த நகைச்சுவை  நடிகர் என்கிற பாராட்டுதலுடன் இரண்டாவது பிலிம்ஃபேர் விருது கிடைத்தது. அதிரடி,  நகைச்சுவை, காதற்காவியப் படங்களில் நடித்து வெற்றிகண்டது போலவே அவரது இயல்பான நடிப்பின் மூலம் நாடக படங்களில் நடித்துப் பெயர்பெற்றார், அத்தகைய திரைப்படங்கள் ஏக்ரிஷ்டா (2001)
ஆங்கன் (2002) பிவாபா (2005) மற்றும்
வாகத்: தி ரேஸ் அகைன்ச்ட் தி டைம் (2005).
2006ல் ஹேரா பேரிக்குத் பின்தொடர்சியாக வந்த பிர் ஹேரா பேரியில் நடித்தார்.






அது முன்னது போலவே, பாக்ஸ் ஆபீஸில் மகத்தான வெற்றி கண்டது. பிறகு
சல்மான்கானுடன் இசை காதற்காவியமான ஜான் ஈ மான் திரைப்படத்தில் நடித்தார். அது முன்கூட்டி எதிர்பார்க்கப்பட்ட படமாகும், விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்ற போதிலும், பாக்ஸ் ஆபீஸில் எதிர்பார்ப்பிற்கிணங்க வெற்றி பெறவில்லை. படம் குறைந்த வெற்றிபெற்றிருந்த போதும், அவர் ஏற்றிருந்த வெட்கப்படும், மந்தமான கதாப்பாத்திரம் மிகுந்த பாராட்டைப் பெற்றது. அவ்வருடம் வெளிவந்த நகைச்சுவைப் படம் பாகம் பாக் ஒருசிறந்த வெற்றிப்படமாக அமைந்தது. அதேவருடம், அவர் ஹீட் 2006 உலகச்சுற்றுப் பயணத்தை தனது சக நடிகர்களான சைப் அலிகான் மற்றும் பிரீத்தி ஜிந்தா, , சுஸ்மிதா சென் மற்றும் செலீனா ஜெயிட்லி ஆகியோருடன் மேற்கொண்டார்.







2007 அவருக்கு மிக வெற்றிதரும் ஆண்டாக அமைந்தது, அது அவரது தொழில்வாழ்க்கையில் ஒரு மகத்தான பெரும் சிறப்பான ஆண்டாக விளங்கியது, விமர்சகர்கள், "இதுவரையில்லாத அளவுக்கு அவரால் மிகச்சிறந்த நான்கு மகத்தான வெற்றிப்படங்கள் அதில் ஒன்று கூடத் தோல்வி தழுவாதது" என்று பாராட்டும்படி அமைந்தது.





அவரது முதல் வெளியீடு, நமஸ்தே லண்டன் விமர்சனம் மற்றும் வியாபாரரீதியாக வெற்றியைக் குவித்தது. அவரது நடிப்புத்திறன் மீண்டும் மிகச்சிறந்த நடிகருக்கான பிலிம்ஃபேர் விருதினைப் பெற்றுத்தந்தது. திறனாய்வாளர் டாரான் ஆதர்ஷ் அவரது திறன்பற்றி விமர்சனம் செய்கையில்,"அவர் நிச்சயமாக திரைப்படம் காணச் செல்லும் லட்சக்கணக்கான ரசிகர்கள் நெஞ்சில் ஒரு அதிபயங்கரமான நடிப்பை இப்படம் வாயிலாக இடம்பெறச் செய்துள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளார்.







அவரது அடுத்த இரண்டு படங்களான, ஹேய் பேபீ மற்றும் பூல் புலாய்யா, பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப் படங்களாயின.  அவரது அவ்வாண்டின் கடைசிப்படம் வெல்கம், மிகப்பிரமாதமான உன்னத வெற்றி பெற்றது, அது அவரது ஐந்தாவது தொடர் வெற்றி கண்ட திரைப்படமாகும்.  அவ்வாண்டு வெளிவந்த அவரின் அனைத்துப்படங்களும் வெளிநாட்டு சந்தையிலே நன்கு விற்பனை ஆனது.





2008ல் முதல்படமான, டாஷன், , 11 ஆண்டுகளுக்குப்பிறகு யாஷ் சோப்ரா பிலிம்ஸ் பதாகையின் கீழ்வெளிவந்த திரைப்படமாகும். மிகுந்த எதிர்பார்ப்புகள் இருப்பினும் அப்படம் விமர்சனம், வியாபார ரீதிகளில் தோல்வியையேச் சந்தித்தது. அவ்வருடத்தின் இரண்டாம் படம், சிங் ஈஸ் கிங் பாக்ஸ் ஆபீஸில் பெரும்வெற்றி பெற்றது, ஓம் ஷாந்தி ஓம் படத்தின் உலக சாதனையை அது முறியடித்தது. அவரது அடுத்த படம் ஜம்போ என்ற அசைவுப்படம் ஆகும். அதே ஆண்டு குமார் சின்னத்திரையில் வெற்றியார்ந்த நிகழ்ச்சியான ஃபியர் ஃபாக்டர்- க்ஹத்ரோன் கே கில்லாடி தொகுப்பாளராக அறிமுகமானார். 2009ல் இந்நிகழ்ச்சியின் இரண்டாம் பதிப்பிலும் தொகுப்பாளராக வந்தார்.





2009ல், குமார் தீபிகா பட்கோனேவுடன் இணைந்து நடித்த நிகில் அத்வானி இயக்கிய வார்னர் பிரதாஸ் - ரோஹன் சிப்பி தயாரிப்பில் வெளிவந்த சாந்தினிசௌக் டு சைனா திரைப்படம் விமர்சனம் மற்றும் வியாபார ரீதியில் தோல்வியைத் தழுவியது.  குமாரின் அடுத்த படம் 8×10 டாஸ்வீர் நாகேஷ் குகுனூர் என்பவரின் இயக்கத்தில், வெளிவந்த இப்படம் விமர்சனம் மற்றும் வியாபார ரீதியில் தோல்வி கண்டது. அவரது அடுத்தப்படம்
கம்பாக்கத் இஷக் . குமாரின் திரைப்படம்
ப்ளு 2009 அக்டோபர் 16 ஆம்தேதி வெளிவந்தது. அது பாக்ஸ் ஆபிஸில் ரூ.20 கோடிகள் வசூல் செய்தது.







2009ல் பிரியதர்சன் இயக்கத்தில் டி டன டன் என்ற திரைப்படம் வெளிவந்தது.
2010ல் வெளிவந்த சஜித் கான் இயக்கிய நகைச்சுவைத் திரைப்படமான , ஹவுஸ் ஃபுல் வியாபார ரீதியாக மாபெரும் வெற்றிப்பெற்றது. இப்படம் வெளியான வார இறுதியில் மிகப்பெரும் வசூல் சாதனைப்படைத்தது. இந்திய பாக்ஸ் ஆபீசில் இப்படம் மிகபெரும் வெற்றிப்படமாக அறிவிக்கப்பட்டது.




தனிப்பட்ட வாழ்க்கை



இவர் பாலிவுட் நடிகையான ட்விங்கிள் கன்னா வை 14 ஜனவரி 2001ல், திருமணம் செய்து கொண்டார். அவர்களது மகன் ஆரவ் 2002ல் பிறந்தான்.


2009 ஏப்ரல் வகோலா காவல்துறையினர் அக்க்ஷய்குமார் மற்றும் டுவிங்கிள் கண்ணா இருவர் மீதும், லக்மே பேஷன் வாரம் நடைபெற்றபோது அக்க்ஷயின் உரப்புக் காற்சட்டை பட்டன்களை டுவிங்கிள் அவிழ்த்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு இந்தியக் குற்றவியல் சட்டம் 294 பிரிவின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.





மத்திய அரசு, சாலை பாதுகாப்பு விழிப்பு உணர்வு பிரசாரத்தை நடத்தி வருகிறது. இதற்கு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் விளம்பரத் தூதுவராக உள்ளார். இந்நிலையில், சாலை பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பரங்களில் நடித்துள்ளார் அக்ஷய் குமார். தலா ஒரு நிமிடம் ஓடக்கூடிய இந்த விளம்பரங்கள், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன. தான் நடித்த மூன்று வீடியோக்களையும், தனது ட்விட்டர் பக்கத்தில் அக்ஷய் குமார் பதிவிட்டுள்ளார்.





மேலும் அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், `சாலை விபத்துகள் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களை அறிந்துகொண்டபின், உடனடியாக மக்கள் மத்தியில் விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த விளம்பரங்களில் நடித்தேன். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோருக்கு நன்றி’ என்று பதிவிட்டுள்ளார். வெளியிடப்பட்ட 3 வீடியோக்களிலும் போக்குவரத்துக் காவலராக தோன்றி சாலைவிதிகளைக் கடைப்பிடிக்கத் தவறுபவர்களிடம், விழிப்பு உணர்வை ஏற்படுத்துகிறார் அக்ஷய் குமார்.





இன்ஸ்டாகிராமில் 20 மில்லியன் (2 கோடி) ஆதரவாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளா முதல் பாலிவுட் நடிகர் என்ற பெருமையைப் பெற்றுள்ள அக்ஷய் குமாருக்கு இன்ஸ்டாகிராம் மெமண்டோ விருது வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முறையான அறிவிப்பை இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.




இதுகுறித்து ஏர்லிப்ட் படத்தின்மூலம் புகழ்பெற்ற அக்ஷய் குமார் தனக்கு இன்ஸ்டாகிராம் வழங்கிய நினைவுப்பரிசு பெற்ற படத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அவரது வலைதளப் பகிர்வு வருமாறு:
''இங்கு, இன்ஸ்டாகிராம் மக்களிடமிருந்து எனக்கு இன்னொரு தங்கம் கிடைத்திருக்கிறது. மகிழ்ச்சியோடு இதை பகிர்ந்துகொள்கிறேன். 20 மில்லியன் ஆதரவாளர்களைப் பெற்றுள்ள முதல் பாலிவுட் ஆண் நடிகர் என்ற பெற்றுள்ளேன்.





இது    இன்ஸ்டாகிராமின்    ஒரு   மைல்கல்     
என்று     குறிப்பிடுகிறார்கள்.     
உங்கள்    நிறைந்த     
அன்புக்காகவும்,    
பிரார்த்தனைக்காகவும்    
உங்கள்    அனைவருக்கும்    மீண்டும்    
எனது    நேசமிக்க    நன்றிகள்.''    
அக்ஷய்   குமாருக்கு    சமூக     
வலைதளங்களில்    வாழ்த்துக்கள்    
குவிந்த    வண்ணம்    உள்ளன.     
லண்டன்    ஒலிம்பிக்கில்    தங்கம்     
வென்ற    முதல்    இந்திய    வீரரைப்     
பற்றிய    அவரது    சமீபத்திய     
பாலிவுட்    திரைப்படமான    கோல்ட்     
திரைப்படம்     வசூலைக்    குவித்து     
வருவது     குறிப்பிடத்தக்கது.





பிரமாண்டம்    ஷங்கர்    இயக்கியுள்ள    
‘2.0’   திரைப்படம்   பல    மொழிகளில்     
வெளியாக    உள்ளது.     
முதலில்    இது   எந்திரன்   படத்தின்     
இரண்டாம்   பாகம்   என   கூறப்பட்டது.     
ஆனால்   அடுத்தடுத்த     சந்திப்புகளில்     
இதனை    இயக்குநர்    ஷங்கர்    மறுத்தார்.     
அதற்கு    இந்தப்    பாகத்திற்கும்     
தொடர்பு    இல்லை    என    கூறியிருந்தார்.     
படம்   பல   மொழிகளில்    வெளிவர     
உள்ளதால்    இதில்    பாலிவுட்     
நடிகர்   அக்ஷய்  குமாரை   தேர்வு     
செய்து    நடிக்க    வைத்திருந்தது    
படக்குழு.     
பொதுவாக   இந்தி    நடிகர்கள்    
தமிழில்    அறிமுகமாகும்   போது    
அதற்குதக்க    சரியான    நபரை     
தேர்வு    செய்து    தமிழில்     
டப்பிங்    செய்வர்.






அமிதாப்   முதன்   முதலாக   தமிழில்     
பேசிய   போது   அதற்கு   சரியான    
நபராக    நிழல்கள்  ரவி    இருந்தார்.     
அதேபோல    அக்ஷய்   குமாருக்கு     
சரியான    நபரை   வைத்து    டப்பிங்     
செய்ய   வேண்டும்   என    
போராடிக்   கொண்டிருந்தது   ‘2.ஓ’    படக்குழு.     
இந்நிலையில்    முறையான    
குரல்    கிடைக்காததால்     
அக்ஷய்   குமாரே    தமிழில்     
முழுமையாக    டப்பிங்   பேசியுள்ளதாக     
தகவல்   வெளியாகி   உள்ளது.    
மிக    அற்பணிப்போடு    அக்ஷய்    
அந்தப்   பணியை   செய்து     
முடித்துள்ளதாக    சினிமா   வட்டாரம்     
தகவல்   வலம்   வர    தொடங்கியுள்ளது.









மிண்டும்   அடுத்த   பதிவில்    
சந்திப்போம் ....













கருத்துகள்

பிரபலமான இடுகைகள்